இலங்கை
செவ்வந்தியுடன் தொடர்பில்லை; சத்தியம் செய்கின்றார் சமல்!
செவ்வந்தியுடன் தொடர்பில்லை; சத்தியம் செய்கின்றார் சமல்!
கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட் டுள்ள செவ்வந்தியுடன் எந்தவொரு தொடர்புகளும் இல்லை என முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாகச் செயற்பட்ட இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டமை பாராட்டத்தக்கது. செவ்வந்தியுடன் ராஜபக்ச குடும்பத்தாருக்குத் தொடர்புள்ளதாக சிலர் தவறான தகவல்களைப் பரப்புகின்றனர். சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பொய்யான தகவல்களால் எமது குடும்பத்துக்கு அநீதி இழைக்கப்படுகின்றது-என்றார்.