இலங்கை

மஹிந்தானந்த மற்றும் நளின் ஆகியோர் குறித்த வழக்கு மேன்முறையீட்டு விசரணைக்கு உத்தரவு!

Published

on

மஹிந்தானந்த மற்றும் நளின் ஆகியோர் குறித்த வழக்கு மேன்முறையீட்டு விசரணைக்கு உத்தரவு!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் குறித்த தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்துள்ள மேன்முறையீடுகளை ஜனவரி மாதம் 20ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.

 பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மேன்முறையீடுகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

Advertisement

 இதன்போது குறித்த மேன்முறையீடுகளை ஜனவரி மாதம் 20ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது. 

 இந்த மேன்முறையீடுகள் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகிய இருவரும் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version