இலங்கை

வெளிநாட்டிலிருந்து வந்த இளைஞன் அதிரடி கைது

Published

on

வெளிநாட்டிலிருந்து வந்த இளைஞன் அதிரடி கைது

2 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று  (28) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியசை் சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் ஆவார்.

Advertisement

சந்தேக நபரான இளைஞன் தாய்லாந்தின் பேங்கொக் நகரத்தில் இருந்து இன்றைய தினம் காலை 10.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

பின்னர் சந்தேக நபரான இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ( Green Channel) வழியாக விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேக நபரான இளைஞன் கொண்டு வந்த பயணப்பொதிகளில் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 02 கிலோ 523 கிராம் குஷ் போதைப்பொருள் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Advertisement

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version