வணிகம்

₹10,000 எஸ்.ஐ.பி. முதலீடு: 15, 20, 25 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் பணத்தின் உண்மையான மதிப்பு எவ்வளவு இருக்கும்?

Published

on

₹10,000 எஸ்.ஐ.பி. முதலீடு: 15, 20, 25 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் பணத்தின் உண்மையான மதிப்பு எவ்வளவு இருக்கும்?

சுஷில் திரிபாதி உங்கள் தந்தையோ அல்லது தாத்தாவோ அவர்கள் காலத்தில், வெறும் ₹100-ஐ வைத்து ஒரு வாரம் முழுவதும் வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அத்தனையும் வாங்க முடிந்தது என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். உங்களுக்கு இப்போது சுமார் 40 வயது என்றால், உங்கள் குழந்தைப் பருவத்தில் ஒரு 10 ரூபாய் கூட ஒரு பெரிய தொகைதான்! ஒரு நல்ல ஹோட்டலில் காலை உணவைச் சாப்பிட அது போதுமானதாக இருந்தது நினைவிருக்கிறதா?ஆனால், காலம் எவ்வளவு மாறிவிட்டது பாருங்கள். இன்று, அதே காலை உணவை நீங்கள் சாப்பிடுவதற்கு ₹300 முதல் ₹400 வரை செலவழிக்க வேண்டியிருக்கலாம்! இதுதான் காலப்போக்கில் உங்கள் பணத்தின் வாங்கும் சக்தியை பணவீக்கம் (Inflation) எனும் கண்ணுக்குத் தெரியாத சக்தி எப்படிச் சிதைத்துள்ளது என்பதற்கான நேரடி உதாரணம்.இன்றிலிருந்து 20 ஆண்டுகள் கழித்து கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் தற்போது மாதச் செலவுகளுக்காக ஒதுக்கும் ₹10,000-க்குக் காய்கறிகள் வாங்க முடியுமா? இன்று ₹70,000 பட்ஜெட்டில் ஓடும் உங்கள் குடும்பச் செலவு, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு எப்படி இருக்கும்?நீங்கள் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) மூலம் முதலீடு செய்பவராக இருந்தால், இதுதான் உங்கள் முன் நிற்கும் மிகப்பெரிய கேள்வி. நீங்கள் எவ்வளவு முதலீடு செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல – உங்களுக்குத் தேவைப்படும் போது உங்கள் பணத்தின் உண்மையான மதிப்பு என்னவாக இருக்கும் என்பதே முக்கியம்!முதலீட்டாளர்கள் செய்யும் முதல் தவறு என்ன? நிதித் திட்டமிடலில் முதலீட்டாளர்கள் செய்யும் பொதுவான தவறு, பணவீக்கத்தை (Inflation) கணக்கில் கொள்ளாமல் இருப்பதுதான்.”15 ஆண்டுகளில் ₹50 லட்சம் திரட்ட வேண்டும்” அல்லது “20 ஆண்டுகளில் ₹1 கோடி இலக்கு” என்று நிலையான எண்ணத்தில் மட்டுமே அவர்கள் சிந்திப்பார்கள்.ஆனால், பணவீக்கத்திற்குப் பிறகு அந்தத் தொகை எதிர்காலத்தில் உண்மையில் எவ்வளவு மதிப்பைக் கொண்டிருக்கும், தங்கள் நிதி இலக்குகளை நிறைவேற்ற அந்தத் தொகை போதுமானதாக இருக்குமா என்று அவர்கள் சிந்திப்பதே இல்லை.உதாரணம்: இன்று நீங்கள் ஒரு பெரிய செலவுக்காக ₹50 லட்சம் செலவிடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆண்டுக்கு 5% பணவீக்கத்தைக் கணக்கில் கொண்டால்…இன்றைய ₹50 லட்சத்தின் மதிப்பு, 15 ஆண்டுகளுக்குப் பிறகு கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்து, 20 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் தற்போதைய மதிப்பில் இருந்து 35% முதல் 40% ஆகக் குறைந்துவிடும் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.எனவேதான், நிதி ஆலோசகர்கள் எப்போதும் பணவீக்கத்திற்குக் கணக்கிடப்பட்ட (அல்லது சரிசெய்யப்பட்ட) எதிர்கால மதிப்பைக் கணக்கிடப் பரிந்துரைக்கிறார்கள்.₹10,000 எஸ்.ஐ.பி (SIP) முதலீடு: பணவீக்கத்திற்குக் பிறகு உண்மையான மதிப்பு!நீங்கள் மாதந்தோறும் ₹10,000 SIP முதலீடு செய்கிறீர்கள் என்றும், சந்தையில் ஆண்டுக்கு 12% வருமானத்தை எதிர்பார்க்கிறீர்கள் என்றும், அதே சமயம் பணவீக்கம் ஆண்டுக்கு 5% இருக்கும் என்றும் வைத்துக் கொள்வோம்.1. 15 ஆண்டுகளுக்குப் பிறகு எஸ்.ஐ.பி (SIP)-இன் உண்மையான மதிப்புபணவீக்கத்தைக் கணக்கில் கொள்ளும்போது, கிட்டத்தட்ட ₹50 லட்சம் மதிப்புள்ள உங்கள் போர்ட்ஃபோலியோவின் உண்மையான மதிப்பு பாதிக்கும் குறைவாகக் குறைகிறது.2. 20 ஆண்டுகளுக்குப் பிறகு எஸ்.ஐ.பி (SIP)-இன் உண்மையான மதிப்புநீங்கள் ₹1 கோடி திரட்டியதாக நினைப்பீர்கள். ஆனால், 20 ஆண்டுகள் கழித்து அந்தத் தொகையின் வாங்கும் திறன் இன்றைய மதிப்பில் ₹37 லட்சத்திற்கும் குறைவாகவே இருக்கும்!3. 25 ஆண்டுகளுக்குப் பிறகு எஸ்.ஐ.பி (SIP) -இன் உண்மையான மதிப்பு25 ஆண்டுகள் முதலீட்டில் கிட்டத்தட்ட ₹1.9 கோடி திரட்டியிருந்தாலும், அதன் உண்மையான வாங்கும் திறன் இன்றைய மதிப்பில் ₹56 லட்சம் மட்டுமே!முதலீட்டாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் பணவீக்கம் என்பது உங்கள் முதலீட்டின் மீதான மௌனமான வரியாக (Silent Tax) செயல்படுகிறது. உங்கள் இலக்குகளை அடையும்போது உங்கள் போர்ட்ஃபோலியோ திரட்டும் தொகை எவ்வளவு என்பதை மட்டும் பார்ப்பது போதாது.இனி உங்கள் நிதி இலக்குகளைத் திட்டமிடும்போது, நீங்கள் செய்ய வேண்டியவை:உங்கள் எதிர்காலச் செலவுகளைக் கணக்கிட பணவீக்க கால்குலேட்டரைப் பயன்படுத்துங்கள்.உங்களின் தற்போதைய முதலீட்டுத் தொகையைவிட, பணவீக்கத்தை விஞ்சும் வருமானத்தை ஈட்டுவதே உண்மையான வெற்றி என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.ஒவ்வொரு ஆண்டும் உங்களின் எஸ்.ஐ.பி (SIP) தொகையை ஒரு குறிப்பிட்ட சதவீதம் (குறைந்தபட்சம் 5% முதல் 10% வரை) உயர்த்துவதே (Step-up SIP) பணவீக்கத்தை எதிர்கொள்ளச் சிறந்த வழியாகும்.இந்தக் கட்டுரை வெறும் தகவல் நோக்கத்திற்காகவே. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் நிதி ஆலோசகரைக் கலந்தாலோசிக்கவும்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்!

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version