இலங்கை

இலங்கைக்கு வந்த பிரித்தானிய பிரஜைக்கு நேர்ந்த துயரம்

Published

on

இலங்கைக்கு வந்த பிரித்தானிய பிரஜைக்கு நேர்ந்த துயரம்

    எல்ல மலைப் பகுதியில் நடை பயணம் செய்து தனது மகளின் 34 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய பிரித்தானிய பிரஜை திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

பிரித்தானியாவின் ஓக்பாத்தைச் சேர்ந்த 63 வயதான பிரட் மக்லீன் என்ற பிரித்தானிய பிரஜை, தனது மகளின் பிறந்தநாளைக் கொண்டாடிய வேளை எல்லவில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

Advertisement

குறித்த பிரித்தானிய பிரஜை கடந்த 16 ஆம் திகதி தனது மகள் நடாலி அன்னேவுடன் நாட்டுக்கு வருகை தந்து வெலிகமவில் தங்கியிருந்தார்.

பின்னர் இருவரும் 23 ஆம் திகதி எல்லவுக்குச் சென்று ஹோட்டலில் தங்கியுள்ளனர்.

இந்நிலையிலேயே, அவர் திடீரென உயிரிழந்தார். சம்பவத்தைத் தொடர்ந்து, பண்டாரவளை நீதவான் கெமுனு சந்திரசேகர, நீதவான் விசாரணைக்கு உத்தரவிட்டார்.

Advertisement

மேலும் உடலை பிரேத பரிசோதனைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

பதுளை போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் மரணத்துக்கான காரணம் திடீர் மாரடைப்பு என உறுதிப்படுத்தியது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version