இலங்கை

இரவில் ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

Published

on

இரவில் ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

திருகோணமலை, மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மேம்காமம் கிராமத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் மிக மோசமாக  காணப்படுவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பகல் வேளைகளில் மேம்காமம் குளத்திலும் அதன் ஓரமாகவும் நிற்கும் காட்டு யானைகள், இரவு நேரத்தில் ஊருக்குள் நுழைவதாகவும்  இதன் காரணமாக தூக்கத்தை தொலைத்து காவல் நிற்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர். அத்தோடு பயன் தரும் மரங்களுக்கு யானைகள் சேதம் விளைவிப்பதாகவும் கவலை தெரிவிக்கின்றனர். 

Advertisement

எனவே காட்டு யானைகள் ஊருக்குள் நுழையாத வகையில் யானை பாதுகாப்பு வேலியை  அமைத்து தருமாறு மேம்காமம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version