இலங்கை

இலங்கை- அவுஸ்திரேலியா கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம்

Published

on

இலங்கை- அவுஸ்திரேலியா கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம்

இலங்கையும் அவுஸ்திரேலியாவும் வெளிநாட்டுக்கடன் மறுசீரமைப்புத் தொடர்பான இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. இந்த நிகழ்வு நிதியமைச்சில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கும், பொருளாதாரத்தை மறுசீரமைப்பதற்கும், மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான முயற்சிகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிப்பதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Advertisement

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் ஹர்ஷனா சூரியப்பெரும, இலங்கை சார்பாக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தங்களின்கீழ் மறுசீரமைக்கப்பட்ட மொத்தக்கடன், 39 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version