இலங்கை

பாதாள உலகுக்கு துணை போகிறதா அரச நிறுவனங்கள்? (வீடியோ இணைப்பு)

Published

on

பாதாள உலகுக்கு துணை போகிறதா அரச நிறுவனங்கள்? (வீடியோ இணைப்பு)

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கத் தாம் உறுதியாகத் தீர்மானித்துள்ளதாகவும், அது நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற கருத்து சமூகத்தில் உருவாகியுள்ளது என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

 அரச கட்டமைப்பிற்குள் இந்தச் செயல்களில் ஈடுபடுபவர்கள் இருந்தால், உடனடியாக விலக வேண்டும் என்று கூறிய ஜனாதிபதி, யாரும் மறைந்து கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டார். போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களைக் காப்பாற்ற, விளையாட்டு, இசை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு கலாச்சாரம் தேவை என்றும், அதற்கான திட்டம் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் என்றும் கூறிய ஜனாதிபதி, போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை மறுவாழ்வுக்கு உட்படுத்துவது நமது பொறுப்பு என்றும் கூறினார்.
ஏற்கனவே தன்னார்வ மறுவாழ்வு மையங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான குழந்தைகளை அந்த இடங்களுக்குக் கொண்டு வந்து ஒப்படைக்குமாறு பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்தார். 

Advertisement

இதற்காக வரவுசெலவுத் திட்டத்தில் பெரும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறிய ஜனாதிபதி, எதிர்காலத்தில் சுங்கம், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், இராணுவம், புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் பொலிஸ் ஆகிய அனைத்தும் இணைந்த ஒரு தேசிய செயல்பாட்டு மையம் அமைக்கப்படும் என்றும், அதன் மூலம் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய யாரும் வெளிநாடுகளுக்குச் செல்லவோ அல்லது மறைந்து தப்பிச் செல்லவோ இடம் இருக்காது என்றும் கூறினார்.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version