சினிமா
மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்த நடிகர் சந்தானம்..
மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்த நடிகர் சந்தானம்..
காமெடி நடிகர் என்றாலே முன்பெல்லாம் கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் என தான் கூறப்பட்டது வந்தது. அவர்களுக்கு அடுத்து பல வருடங்களாக காமெடி ரோலில் நடித்து பெரிய இடத்தை பிடித்திருந்தவர் நடிகர் சந்தானம்.எந்த ஒரு புதுப்படங்களாக இருந்தாலும் சந்தானம் காமெடி இல்லாமல் வெளியாகவே ஆகாது.அந்த அளவிற்கு பெரிய படம், சிறிய படம் என மாறி மாறி நடித்து வந்தவர் ஒரு கட்டத்தில் இனி நாயகன் ரோல் தான் என டிராக் மாறினார்.ஹீரோவாக படங்கள் நடித்து வந்தவர் இப்போது மீண்டும் காமெடி டிராக் வந்துள்ளார். ஏற்கெனவே சிம்பு படத்தில் நடிக்க உள்ளவர், ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவும் கமிட்டாகியுள்ளாராம்.