இலங்கை
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கியின் பாகங்கள் மீட்பு!
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கியின் பாகங்கள் மீட்பு!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நூலகத்தின் மேற்புறத்தில் இருந்து இரண்டு துப்பாக்கிக்கு குண்டுகள் போடப்படும் பாகங்களும், வயர்களும் மீட்கப்பட்டுள்ளன.
நேற்றையதினம் குறித்த பகுதியை சுத்தம் செய்தவேளை குறித்த பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று காலை குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் அந்த துப்பாக்கி பாகங்கள் இரண்டையும், வயர்களையும் மீட்டுச் சென்றனர்.