இலங்கை

ஹிட்லர் போல் செயற்பட்டது ராஜபக்க்ஷ குடும்பமே; மொட்டுக்கு பதிலடி!

Published

on

ஹிட்லர் போல் செயற்பட்டது ராஜபக்க்ஷ குடும்பமே; மொட்டுக்கு பதிலடி!

    ஜனாதிபதி அநுரகுமார திஸாநாக்க அரசமைப்பின் பிரகாரமே செயற்பட்டு வருகின்றார். இதனால்தான் அரசமைப்பு மீறல் தொடர்பில் அவருக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டு கூட இல்லை என பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார சர்வாதிகாரி ஹிட்லர் போல் செயற்படவில்லை என்றும் ராஜபக்க்ஷ குடும்பத்தினர்தான் ஹிட்லர் போல் செயற்பட்டனர் என அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

Advertisement

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஹிட்லர் போல் செயற்படுகின்றார் எனவும், ஹிட்லரைத் தோற்கடிப்பதற்காக அன்று ரஷ்யாவும், அமெரிக்காவும் ஒன்றிணைந்தது போல் எதிரணிகள் ஒன்றுபட வேண்டும் எனவும் பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டிந்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

மஹிந்த ராஜபக்ஷவும், அவரது குடும்பத்தாரும்தான் ஹிட்லர் போல் செயற்பட்டனர்.

Advertisement

ஜனநாயகத்துக்குச் சமாதி கட்டி சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்துவதற்கு 18 ஆவது திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது. இதனைக் சாகர காரியவசம் மறந்து விட்டார் போலும்.

மேலும் ,எமது ஜனாதிபதி அரசமைப்பின் பிரகாரமே செயற்படுகின்றார் என்றும், நாட்டில் சட்டம் என்பது அனைவருக்கும் சமம் என கூறிய பிரதி அமைச்சர் சுனில் வட்டகல இந்தக் கோட்பாட்டை நாம் மீறப்போவதில்லை என்றும் கூறினார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version