இலங்கை

இலங்கையை உலுக்கிய சம்பவம் ; கல்லால் அடித்து குடும்ப பெண் படுகொலை

Published

on

இலங்கையை உலுக்கிய சம்பவம் ; கல்லால் அடித்து குடும்ப பெண் படுகொலை

காலியில் அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாதேகம பிரதேசத்தில் கல்லால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த கொலை சம்பவம் நேற்று  (31) காலை இடம்பெற்றுள்ளது.

Advertisement

அஹுங்கல்ல , பாதேகம பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய பெண் ஒருவரே கொலைசெய்யப்பட்டுள்ளார்.

கொலைசெய்யப்பட்ட பெண்ணுக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 தாக்குதலில் காயமடைந்த பெண் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement

இதனையடுத்து சந்தேக நபரான உறவினர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version