இலங்கை
இலங்கை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் இந்தியா – பிரதமர் கருத்து!
இலங்கை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் இந்தியா – பிரதமர் கருத்து!
புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் இலங்கை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதிலும், கல்வியாளர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதிலும் இந்தியா உதவும் என்று பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய அறிவித்தனர்.
பொலனருவையில் இந்திய அரசாங்க ஆதரவுடன் கட்டப்பட்ட, பயிற்சி மையம் ஒன்றை ததிறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஆசிரியர் திறன்களை மேம்படுத்துவதன் மூலமும், நாட்டின் கல்வி மாற்றத் திட்டத்துடன் இணைந்த ஆக்கப்பூர்வமான கற்பித்தல் முறைகளை ஊக்குவிக்கலாம். இதன்மூலம் இலங்கையின் கல்வி முறையை வலுப்படுத்தலாம் எனக் கூறினார்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை