இந்தியா

ஏகாதசி நாளில் நடந்த துயரம்: ஆந்திரா கோயில் கூட்ட நெரிசலுக்குக் காரணம் என்ன?

Published

on

ஏகாதசி நாளில் நடந்த துயரம்: ஆந்திரா கோயில் கூட்ட நெரிசலுக்குக் காரணம் என்ன?

ஆந்திரப் பிரதேச மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுகா வெங்கடேஸ்வரா கோயிலில் இன்று காலை ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 2 குழந்தைகளும் அடங்கும். இந்தச் சம்பவத்தில் பலர் காயமடைந்தனர்.நெரிசல் ஏற்படக் காரணம் என்ன?காசிபுகாவில் உள்ள இந்த கோயில், தற்போது “சின்ன திருப்பதி” (Little Tirupati) என்றழைக்கப்பட்டு மிகவும் பிரபலம் அடைந்துள்ளது. பொதுவாகச் சனிக்கிழமைகளில் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் வருவதால், இன்று (நவம்பர் 1) ஏகாதசி திதியும் சேர்ந்ததால், கூட்டம் வழக்கத்தை விட மிக அதிகமாக இருந்தது. வழக்கமான சனிக்கிழமைகளில் 10,000 முதல் 15,000 பக்தர்கள் வருவார்கள். ஆனால், இன்று ஏகாதசி என்பதால் சுமார் 25,000 பக்தர்கள் திரண்டிருந்தனர் என்று கோயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.பெண்கள் வரிசையில் முன்னோக்கிச் செல்ல இடத்திற்காக ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாகவே நெரிசல் தொடங்கியதாக கூறப்படுகிறது. பக்தர்கள் சீராக செல்ல கோயில் நிர்வாகம் தடுப்பு வேலிகள் (barricades) அமைத்திருந்தாலும், ஏகாதசி கூட்டத்தின் தாங்க முடியாத அழுத்தத்தால் அந்த தடுப்புகள் உடைந்து விழுந்தன.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கதடுப்புகள் உடைந்ததால் பலர் கீழே விழுந்தனர். கீழே விழுந்தவர்களை அவர்களது குடும்பத்தினர் தூக்க முயன்றபோது ஏற்பட்ட பதற்றம், வெளியேற முயன்றவர்கள் மற்றவர்களைத் தள்ளியது மற்றும் வெளியேறவும் உள்ளே வரவும் ஒரே வழியைப் பயன்படுத்தியதும் நெரிசலையும் குழப்பத்தையும் மேலும் தீவிரப்படுத்தியது. துரதிர்ஷ்டவசமாக, இந்தச் சம்பவத்தில் 9 பேர், 2 குழந்தைகள் உட்பட, தங்கள் உயிரை இழந்தனர்.ஆந்திரா கோயில் நெரிசல் பற்றிய செய்தி பரவியவுடன், முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உடனடியாக உள்ளூர் அதிகாரிகள் மற்றும் எம்.எல்.ஏ. க்களை சம்பவ இடத்திற்குச் சென்று, நிவாரண நடவடிக்கைகளைக் கவனிக்குமாறு உத்தரவிட்டார். ஆந்திரப் பிரதேச மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் நாரா லோகேஷ் இதுகுறித்துப் பேசுகையில், “கூட்டநெரிசல் குறித்த தகவல் கிடைத்தவுடன், நான் அதிகாரிகளுடனும், மாவட்ட அமைச்சர் அச்சம் நாயுடு மற்றும் உள்ளூர் எம்.எல்.ஏ. கௌது ஷிரிஷ் ஆகியோருடனும் பேசினேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவி வழங்க நான் அறிவுறுத்தியுள்ளேன்,” என்று தெரிவித்தார். காயமடைந்தவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க அதிகாரிகளும் காவல்துறையினரும் முயற்சி மேற்கொண்டனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version