இலங்கை

செவ்வாய்-புதன் ஒரே ராசியில் இணைவதால் ராஜயோகம் பெறும் ராசிக்காரர்கள்

Published

on

செவ்வாய்-புதன் ஒரே ராசியில் இணைவதால் ராஜயோகம் பெறும் ராசிக்காரர்கள்

ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசரான புதன் வணிகம், புத்திக்கூர்மை மற்றும் அறிவாற்றலை பாதிக்கிறது. அதேபோல செவ்வாய் தைரியம், வலிமை மற்றும் கோபத்தைக் குறிக்கிறது. இந்த இரண்டு சக்திவாய்ந்த கிரகங்களும் தற்போது விருச்சிக ராசியில் இணையப்போகிறது.

இந்த இணைப்பால் சில ராசிக்காரர்கள் அபரிமிதமான அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று நாம் இங்கு பார்ப்போம்.  

Advertisement

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த இரண்டு கிரகங்களின் இணைப்பு மகத்தான அதிர்ஷ்டத்தை அளிக்கப்போகிறது. இந்த இணைப்பு விருச்சிக ராசியின் லக்னத்தில் உருவாகுவதால் நன்மை பயக்கும் அனுபவங்களை வழங்குகிறது. இது அவர்களின் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் புதிய வணிக கூட்டணிகளை உருவாக்கலாம் மற்றும் சமூக சேவைகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் சமூகத்தில் அவர்களின் நற்பெயரும், மரியாதையும் அதிகரிக்கும்.

கும்ப ராசிக்கு புதனும் செவ்வாயும் இணைவது சகல நன்மைகளையும் அளிக்கப்போகிறது. வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது, அதேசமயம் வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் நல்ல முன்னேற்றத்தை அடையலாம். வேலையில்லாதவர்களுக்கு இந்த காலகட்டத்தில் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

மீன ராசிக்காரர்களுக்கு புதனும் செவ்வாயும் இணைவது பல நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரப்போகிறது. அவர்களின் அனைத்து திட்டங்களும் அவர்களின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் சிறந்த பலன்களைத் தரும். சமூகத்தில் அவர்களின் மரியாதை அதிகரிக்கும், மேலும் அவர்களின் பயணங்கள் அவர்களுக்கு பெரும் நன்மைகளைக் கொடுக்கும். அவர்களின் புத்திக்கூர்மை வலுவடைவதால் அவர்கள் பல்வேறு வழிகளில் வருமானத்தைப் பெறலாம்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version