இலங்கை
தமிழ் – முஸ்லிம் மக்களின் நட்புறவை கட்டியெழுப்ப விசேட கலந்துரையாடல்!
தமிழ் – முஸ்லிம் மக்களின் நட்புறவை கட்டியெழுப்ப விசேட கலந்துரையாடல்!
வடக்கு, கிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையில் நட்புறவை கட்டியெழுப்பும் கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.
யாழ் தந்தை செல்வா கலையரங்கத்தில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் வடக்கில் முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டு 35 வருட நிறைவை நினைவுகூறும் முகமாக குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடல் வடக்கில் இருந்து வெளியேறிய முஸ்லிம் மக்கள் மீண்டும் தமது பிரதேசங்களில் மீள் குடியேற்றப்பட வேண்டும். தமிழ் முஸ்லிம் மக்களிடம் நல்லதொரு உறவுப் பாலத்தை கட்டியெழுப்புவதற்கு முஸ்லிம் மக்கள் தயாராக இருக்கின்ற நிலையில் இரு தரப்பினரும் உறவை வளர்த்துக் கொள்ள தூயமனதுடன் முன்வர வேண்டும் எனும் நோக்கில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.