இலங்கை

யாழில். மாடியில் இருந்து கீழே விழுந்ததில் ஒருவர் பலி!

Published

on

யாழில். மாடியில் இருந்து கீழே விழுந்ததில் ஒருவர் பலி!

யாழில் வெற்றிலை துப்ப முயற்சித்த ஒருவர் மாடியில் இருந்து கீழே விழுந்த நிலையில் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். நீர்வேலி, அச்செழு பகுதியை சேர்ந்த 56வயதுடைய சுப்பையா உதயராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

Advertisement

இவர் கடந்த 22ஆம் திகதி மேல் மாடியில் மேசன் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது மழை பெய்து கொண்டிருந்தது. இதன்போது இவர் வெற்றிலை துப்புவதற்காக சட்டடத்தின் முகப்பு பகுதிக்கு சென்றவேளை கால் தவறி கீழே விழுந்துள்ளார்.  சிகிச்சைக்காக  யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட  நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version