இலங்கை
இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததில் இளைஞன் பலி!
இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததில் இளைஞன் பலி!
யட்டியந்தோட்டை பகுதியில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் ஒன்று வெடித்ததில் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
யட்டியந்தோட்டை – கிருபொருவ தோட்டத்தில் இயங்கும் தொழிற்சாலை ஒன்றிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 25 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 3 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ருவான்வெல்ல பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.