இலங்கை

யாழிற்கு வருகை தந்த தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் இளம் தலைவர்கள்!

Published

on

யாழிற்கு வருகை தந்த தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் இளம் தலைவர்கள்!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அழைப்பின் பேரில் வருகைதந்த தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் இளம் தலைவர்கள் இன்றையதினம் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தை பார்வையிட்டனர்.

14 அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 24 பேர் கொண்ட இளம் அரசியல் தலைவர்கள் குழு இந்தியாவிற்கு விஜயம் செய்ததை அடுத்து  தொடர்ச்சியாக வடக்கு மாகாண விஜயம் மேற்கொண்டனர். இவ் விஜயத்தின் போது வடக்கு மாகண மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் கள விஜயங்கள் மேற்கொள்ளும் நோக்கத்துடன் வருகைதந்த குறித்த குழுவினர், நேற்றையதினம் யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை வரை புகையிரதத்தில் பயணித்து காங்கேசன்துறை துறைமுகம், மயிலிட்டி மீன்பிடித்துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலையம் ஆகியவற்றுக்குச் சென்று அங்குள்ள அபிவிருத்தி நிலைமைகள் தொடர்பாகவும் ஆராய்ந்தனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version