இலங்கை

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி உள்நுழைந்த இந்திய மீனவர்கள் கைது!

Published

on

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி உள்நுழைந்த இந்திய மீனவர்கள் கைது!

எல்லை தாண்டி வந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் இன்று காரைநகர் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

மூன்று படகுகளில் வந்த  31 இந்திய மீனவர்களே இவ்வாறு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தவேளை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் யாழ்ப்பாணம் மாவட்ட நீரியல்வள திணைக்களத்தினர், கடற்படையினரிடமிருந்து பொறுப்பேற்றுள்ளனர். 

Advertisement

கைதாகிய  குறித்த இந்திய மீனவர்களுக்கு  எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை  அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version