இலங்கை

சுன்னாகம். பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

Published

on

சுன்னாகம். பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

சந்தேக நபர் ஒருவர் தப்பிச் சென்றதை அடுத்து சுன்னாகம் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் இன்றையதினம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபால இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

Advertisement

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நால்வர் ஹெரோயினுடன் சுன்னாக  பொலிஸாரால் கைது செய்யப்பட்டடனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட நால்வரும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். பின்னர் பிரதான சந்தேகநபரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய பொலிஸார் அனுமதி கோரிய நிலையில் மன்றம்  அதற்கு அனுமதி வழங்கியது. தடுப்புகாவல் விசாரணையின் பின்னர் குறித்த சந்தேகநபரை  மல்லாகம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றவேளை சந்தேகநபர் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அந்த சம்பவத்தின்போது கடமையில் இருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் இன்றையதினம் தற்காலிகப்  பணியிடை நீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version