இந்தியா

தெரு நாய்களுக்கு உணவளிப்பது குறித்து வழக்கு: நவ. 7-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கும் சுப்ரீம் கோர்ட்

Published

on

தெரு நாய்களுக்கு உணவளிப்பது குறித்து வழக்கு: நவ. 7-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கும் சுப்ரீம் கோர்ட்

தெரு நாய்கள் விவகாரத்தில் உத்தரவு பிறப்பிக்கும் முன் தங்களையும் விசாரிக்க வேண்டும் என்று சில தலையீடு செய்தவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கோரிய போதும், உச்ச நீதிமன்ற அமர்வு அதை மறுத்துவிட்டது.ஆங்கிலத்தில் படிக்க:உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவை “சில நாட்களில்” பிறப்பிக்க இருப்பதாகவும், ஊழியர்கள் நாய்களை ஆதரிக்கும் அரசு உட்பட பல நிறுவனங்களில் நாய்களுக்கு உணவளிப்பதைக் கட்டுப்படுத்துவது குறித்தும் இந்த உத்தரவு இருக்கும் என்று திங்கட்கிழமை கூறியது.நீதியரசர் விக்ரம் நாத் தலைமையிலான மற்றும் நீதிபதிகள் சந்தீப் மேத்தா, என்.வி. அஞ்சாரியா ஆகியோரைக் கொண்ட மூன்று நீதிபதிகள் அமர்வு, நாடு முழுவதும் உள்ள தெரு நாய்கள் அச்சுறுத்தல் தொடர்பாக நீதிமன்றமே தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கை விசாரித்து வருகிறது.“குறிப்பாக அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள் நாய்களுக்கு ஆதரவளித்து, உணவளித்து, ஊக்குவிக்கும் மற்ற பெரிய நிறுவனங்கள் குறித்து சில உத்தரவுகளை நாங்கள் பிறப்பிக்க இருக்கிறோம்” என்று நீதிபதி நாத் கூறினார்.இந்த விவகாரத்தை உத்தரவுகளுக்காக நீதிமன்றம் நவம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.உத்தரவு பிறப்பிக்கும் முன் தங்களையும் விசாரிக்க வேண்டும் என்று சில தலையீடு செய்தவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திடம் கோரியபோதும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு அதனைக் நிராகரித்தது. “நிறுவன விவகாரங்களுக்காக, நாங்கள் எந்த வாதத்தையும் கேட்கப் போவதில்லை” என்று உச்ச நீதிமன்ற அமர்வு கூறியதுடன், இடைக்கால உத்தரவுக்குப் பிறகு இந்த தரப்பினரைத் தொடர்ந்து விசாரிப்போம் என்றும் தெரிவித்தது.முந்தைய விசாரணைகள் மற்றும் மாநில தலைமைச் செயலாளர்கள் ஆஜர்கடந்த அக்டோபர் 27-ம் தேதி தெரு நாய்கள் வழக்கை விசாரித்தபோது, நாய்கள் தாக்குதல் குறித்த அறிக்கைகள் இந்தியாவின் நற்பெயரைக் வெளிநாடுகளில் களங்கப்படுத்தப் பயன்படுவதாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. இது தொடர்பாக முந்தைய உத்தரவுகளுக்கு இணங்க பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்யத் தவறியதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்தது.மேற்கு வங்கம் மற்றும் தெலங்கானா தவிர அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களையும் நேரில் ஆஜராகி இந்தக் குறைபாட்டை விளக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.திங்கள்கிழமை, அந்தந்த தலைமைச் செயலாளர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, தாங்கள் இணக்கப் பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்துள்ளதாக அமர்வுக்குத் தெரிவித்தனர். இதைக் கருத்தில் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, அவர்களின் தனிப்பட்ட முறையில் நேரில் ஆஜராவது “இனி தேவையில்லை” என்று கூறியது. ஆனால் “நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவுகளுக்கு இணங்குவதில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அவர்கள் ஆஜராவது மீண்டும் அவசியமாகிவிடும்” என்றும் எச்சரித்தது.மேலும், உச்ச நீதிமன்ற அமர்வு தலையீட்டு விண்ணப்பங்களை அனுமதித்தது. இந்த விண்ணப்பங்களுக்கு ரூ.25,000 அல்லது ரூ.2 லட்சம் (பொருந்தக்கூடியது) வைப்புத் தொகையாகச் செலுத்த வேண்டும் என்று முன்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் ஒரு தரப்பாக மாற விரும்பிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (என்.ஜி.ஓ) மற்றும் நாய் பிரியர்களை, முதலில் நீதிமன்றப் பதிவகத்தில் தொகையைச் செலுத்தும்படி கேட்டிருந்தது.உச்ச நீதிமன்ற அமர்வு பாதிக்கப்பட்டவர்களின் தலையீட்டு விண்ணப்பங்களையும் அனுமதித்தது. ஆனால், அவர்கள் அத்தகைய பண வைப்புத் தொகையைச் செலுத்தத் தேவையில்லை என்று உத்தரவிட்டது. இந்த விவகாரம் குறித்து இந்திய விலங்குகள் நல வாரியத்திற்கும் அமர்வு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (என்.சி.ஆர்) தெரு நாய்கள் நடத்திய கடுமையான மற்றும் அபாயகரமான தாக்குதல்கள் குறித்து ஊடக அறிக்கைகள் வெளிவந்த பிறகு, உச்ச நீதிமன்றம் ஜூலை மாதம் இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. ஆரம்பத்தில் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, அப்பகுதியில் உள்ள அனைத்துத் தெரு நாய்களையும் எட்டு வாரங்களுக்குள் பிடித்து நிரந்தரமாகப் பாதுகாப்பகங்களில் வைக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட்டது. இந்தக் கட்டளை மிருக நலக் குழுக்களின் விமர்சனத்தை எதிர்கொண்டது, அவர்கள் இதை “மிகவும் கடுமையானது” மற்றும் நடைமுறைக்கு ஒவ்வாதது என்று குறிப்பிட்டனர்.பொதுமக்கள் எதிர்ப்புக்கு பதிலளிக்கும் விதமாக, தலைமை நீதிபதி இந்த வழக்கைத் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு ஒதுக்கியதோடு, ஆகஸ்ட் 22-ம் தேதி உத்தரவைத் திருத்தினார். நிரந்தரப் பாதுகாப்பகங்களுக்கான உத்தரவுக்குத் தடை விதித்த அமர்வு, இந்த வழக்கின் விசையின் வரம்பை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தியது.ஆகஸ்ட் 22 தேதியிட்ட உத்தரவில், தடுப்பூசி போடப்பட்ட நாய்களை டெல்லி – என்.சி.ஆர்-இல் உள்ள பாதுகாப்பகங்களில் இருந்து விடுவிக்கத் தடை விதிக்கும் முந்தைய உத்தரவையும் உச்ச நீதிமன்றம் திருத்தியது. அதை “மிகவும் கடுமையானது” என்று குறிப்பிட்ட நீதிமன்றம், நாய்களுக்கு கருத்தடை மற்றும் குடல் புழு நீக்க நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு அவற்றை விடுவிக்க உத்தரவிட்டது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version