இலங்கை

அனுர எனது நல்ல நண்பர்; பேரணியில் பங்கேற்கபோவதில்லை; மனோ கணேசன் எம்பி

Published

on

அனுர எனது நல்ல நண்பர்; பேரணியில் பங்கேற்கபோவதில்லை; மனோ கணேசன் எம்பி

 நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிரான மக்கள் பேரணியில் முக்கிய அரசியல் புள்ளிகளைக் களமிறக்குவதற்குரிய முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது.  

இந்நிலையில் நவம்பர் 21 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டு எதிர்க்கட்சி பேரணியில் தனது கட்சி பங்கேற்காது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் (TPA) தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Advertisement

ஊடகவியலாளர்களிடம் பேசிய எம்.பி. கணேசன், சில காரணங்களால் டி.பி.ஏ பேரணியில் பங்கேற்காது என்று கூறினார்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) முடிவு குறித்து தனக்கு உறுதியாக தெரியவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுடனான பிரச்சினைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது என்ற கருத்துக்களை மறுத்த மனோ கணேசன், எந்த அரசியல்வாதிகளுடனும் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் கூறினார்.

Advertisement

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகரவின் தோளைப் பிடித்துக்கொண்டு, அவர்கள் அனைவரும் நல்ல நண்பர்கள் என்று கூறிய எம்.பி. கணேசன்,  அனுரவும் எனக்கு நல்ல நண்பர்  என்றும்  மனோ கணேசன் எம்பி கூறினார். 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version