இலங்கை
அம்பாறையில் கட்டையால் அடித்து நபர் ஒருவர் படுகொலை!
அம்பாறையில் கட்டையால் அடித்து நபர் ஒருவர் படுகொலை!
அம்பாறை மத்திய முகாம் பகுதியில் ஒருவர் கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பழைய தகராறின் விளைவாக இந்தக் கொலை நடந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இறந்தவர் வீரகொடவைச் சேர்ந்த 31 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கொலை தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் மத்திய முகாம் மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து மத்திய முகாம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை