இலங்கை

இலங்கை புகையிரதத் திணைக்களத்திற்கு பெண் உத்தியோகஸ்தர்கள் ஆட்சேர்ப்பு!

Published

on

இலங்கை புகையிரதத் திணைக்களத்திற்கு பெண் உத்தியோகஸ்தர்கள் ஆட்சேர்ப்பு!

   இலங்கை புகையிரத இயந்திர சாரதிகள், புகையிரத பாதுகாப்பு அதிகாரி, புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் புகையிரத மேற்பார்வை முகாமையாளர் போன்ற பதவிகளுக்கு பெண் உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்புச் செய்ய்யப்படவுள்ளனர்.

அரசின் புதிய பொருளாதாரக் கொள்கைக்கமைய அரச துறையில் இதுவரை பெண்களை ஆட்சேர்ப்புச் செய்யாத பதவிகளுக்குப் பெண்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதற்கமைய, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்திற் கொண்டு, தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆட்சேர்ப்பு நடவடிக்கை முறைகளில் பெண் உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான ஏற்பாடுகள் இன்மையால், அரசியலமைப்பின் 55 உறுப்புரையின் (1) உப அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கமைய அமைச்சரவைக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்காக புகையிரதத் திணைக்களத்திற்கு பெண் உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்புச் செய்ய கொள்கை ரீதியான அங்கீகாரத்தை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version