இலங்கை

சிறப்பு அதிரடிப்படைக்கு புதிய வாகனங்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி!

Published

on

சிறப்பு அதிரடிப்படைக்கு புதிய வாகனங்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி!

சிறப்பு அதிரடிப்படைக்கு (STF) 125cc எஞ்சின் திறன் கொண்ட 100 மோட்டார் சைக்கிள்களையும் 50 முச்சக்கர வண்டிகளையும் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

 சிறப்பு அதிரடிப்படை முழு நாட்டையும் உள்ளடக்கிய வகையில் 76 பிரதான முகாம்கள், 23 துணை முகாம்கள் மற்றும் 14 சிறப்பு பிரிவுகளை இயக்குகிறது.

Advertisement

இந்நிலையில் அவர்களின் கடமைகளை நிறைவேற்றுவதற்காக 314 மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. 

அவற்றுள்ள 90 சதவீதமானவை 10 ஆண்டுகளுக்கும் மேலானவை என்றும் அவற்றில் சிலவற்றில் தொழில்நுட்ப குறைப்பாடுகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 இந்த நிலைமை சிறப்பு அதிரடிப்படையின் கடமைகளை முன்னெடுக்க பாரிய தடையாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்படி வாகனங்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version