இலங்கை

முல்லைத்தீவில் சுவர் விழுந்து ராணுவம் உயிரிழப்பு

Published

on

முல்லைத்தீவில் சுவர் விழுந்து ராணுவம் உயிரிழப்பு

  முல்லைத்தீவு, முள்ளியவளையில் உள்ள 59 ஆவது படைப்பிரிவு முகாமில் கைவிடப்பட்ட கட்டடத்தின் செங்கல் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் இந்த சம்பவத்தில் 3 இராணுவச் சிப்பாய்கள் காயமடைந்துள்ளனர்.

Advertisement

இந்தத் தகவலை பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று (4) தெரிவித்துள்ளது.

குருநாகலைச் சேர்ந்த 24 வயதுடைய இராணுவச் சிப்பாயே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்றபோது உயிரிழந்த சிப்பாயும், காயமடைந்த 3 சிப்பாய்களும் விறகு சேகரித்துக் கொண்டிருந்தனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

காயமடைந்த சிப்பாய்கள் மூவரும் மாஞ்சோலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version