இலங்கை

தனியார் பேருந்து நடத்துனர் காலி முகத்திடல் பகுதியில் செய்த கொடூர செயல்

Published

on

தனியார் பேருந்து நடத்துனர் காலி முகத்திடல் பகுதியில் செய்த கொடூர செயல்

சமூக ஊடகங்களில் பரவி வரும் நபர் ஒருவரைத் தாக்கும் காணொளி தொடர்பாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று (04) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

Advertisement

கோட்டை பொலிஸ் பிரிவின் காலி முகத்திடல் பகுதியில் ஒரு குழுவால் ஒருவர் தாக்கப்படுவதைக் காட்டும் காணொளி ஒன்று  சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. 

இந்த காணொளி தொடர்பாக கோட்டை  பொலிஸார் நடத்திய விசாரணையில், டிக்கெட்டுக்கான பணத்தின் அளவு தொடர்பாக ஏற்பட்ட தகராறில், தனியார்  பேருந்தின் நடத்துனரும் மற்றொரு நபரும் பேருந்தில் இருந்த பயணி ஒருவரை தடியால் தாக்கியது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, கோட்டை காவல் நிலைய அதிகாரிகள் குழு ஒன்று, இந்தத் தாக்குதல் தொடர்பாக சந்தேகிக்கப்படும் பேருந்தின் நடத்துனரை கோட்டை பேருந்து நிலையத்தில் கைது செய்தனர்.

Advertisement

சந்தேக நபர் பாணந்துறை, திரிபேரிய பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version