இலங்கை

ரயிலுடன் மோதிய கார் ; ஸ்தம்பித்து போன புகையிரத சேவைகள்

Published

on

ரயிலுடன் மோதிய கார் ; ஸ்தம்பித்து போன புகையிரத சேவைகள்

களனிக்கும் வனவாசலவுக்கும் இடையிலான ரயில் கடவையில் கார் ஒன்று ரயில் மீது இன்று (5) மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து பொல்கஹவெல நோக்கி சென்ற ரயிலுடனே குறித்த கார் மோதி விபத்துக்குள்ளானது.

Advertisement

விபத்தில் கார் 200 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து காரணமாக பிரதான ரயில் மார்க்கத்தில் ரயில் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version