இலங்கை

இறைவரித் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

Published

on

இறைவரித் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி விபரத்திரட்டுக்களை சமர்ப்பிப்பது தொடர்பாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேற்கூறிய மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக்குப் பதிவு செய்துள்ள அனைத்து நபர்களும், தமது வருமான வரி விபரத்திரட்டுக்களை நவம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு அல்லது அதற்கு முன்னதாக இணையவழியில் சமர்ப்பிப்பது கட்டாயமாகும் எனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

Advertisement

குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் வருமான வரி விபரத்திரட்டுக்களைச் சமர்ப்பிக்கத் தவறும் நபர்களுக்கு எதிராக, 2017 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலதிக தகவல்களை 1944 அல்லது www.ird.gov.lk என்ற இணையத்தளத்தைப் பார்வையிடலாம் அல்லது அருகில் உள்ள உள்நாட்டு இறைவரிப் பிராந்திய அலுவலகத்தில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version