இலங்கை

சுன்னாகத்தில் வன்முறைக்குழுவின் அட்டகாசம்!

Published

on

சுன்னாகத்தில் வன்முறைக்குழுவின் அட்டகாசம்!

நேற்றிரவு  சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சூராவத்தை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வன்முறை குழுவொன்று அட்டகாசம் புரிந்துள்ளதால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

Advertisement

குறித்த வீட்டிற்குள் அத்துமீறி உள்நுழைந்த குறித்த வன்முறைக்குழு அங்கு நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மீது தீ வைத்துள்ளது. இதனால் முச்சக்கர வண்டியானது முழுமையாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. மேலும் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதுடன், வீட்டில் உள்ள பொருட்களும் அடித்து உடைக்கப்பட்டன. இந்நிலையில் விழிப்படைந்த வீட்டார்  தீயை அணைத்ததால் சேதங்கள் ஏற்படுவது கட்டுப்படுத்தப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில்  சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுன்னாகம் பொலிஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version