இலங்கை
தமிழர் பகுதியொன்றில் அதிரடி காட்டிய பொலிஸார் ; மூவர் கைது
தமிழர் பகுதியொன்றில் அதிரடி காட்டிய பொலிஸார் ; மூவர் கைது
புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து, கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் உள்ள மரத்தளபாட உற்பத்தி நிலையத்திற்கு, அனுமதிப்பத்திரம் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட முதிரை மரக்குற்றிகளை இன்று பொலிஸாரால் மீட்கப்பட்டன.
தர்மபுர பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக, முதிரை மரக்குற்றிகளை பொலிஸார் மீட்டதுடன், அவற்றை எடுத்துச் செல்லப் பயன்படுத்திய வாகனங்களுடன் மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்தனர்.
வாகனம் மற்றும் சந்தேக நபர்களை நாளைய தினம் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.