இலங்கை
தர்மபுரத்தில் முதிரை மரக்குற்றிகள் பொலிஸாரால் மீட்பு!
தர்மபுரத்தில் முதிரை மரக்குற்றிகள் பொலிஸாரால் மீட்பு!
புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து, கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் உள்ள மரத்தளபாட உற்பத்தி நிலையத்திற்கு, அனுமதிப்பத்திரம் இல்லாமல் சட்ட விரோதமாக எடுத்துச் செல்லப்பட்ட 30இலட்சம் ரூபா பெறுமதியான முதிரை மரக்குற்றிகள் நேற்றய தினம் பொலிஸாரால் மீட்கப்பட்டன.
தர்மபுர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக, முதிரை மரக்குற்றிகளை பொலிஸார் மீட்டதுடன், அவற்றை எடுத்துச் செல்லப்பயன்படுத்திய வாகனங்களுடன் மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்தனர்.
வாகனம் மற்றும் சந்தேக நபர்களை இன்றைய தினம் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.