இலங்கை

தர்மபுரத்தில் முதிரை மரக்குற்றிகள் பொலிஸாரால் மீட்பு!

Published

on

தர்மபுரத்தில் முதிரை மரக்குற்றிகள் பொலிஸாரால் மீட்பு!

புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து, கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் உள்ள மரத்தளபாட உற்பத்தி நிலையத்திற்கு, அனுமதிப்பத்திரம் இல்லாமல் சட்ட விரோதமாக  எடுத்துச் செல்லப்பட்ட  30இலட்சம் ரூபா பெறுமதியான முதிரை மரக்குற்றிகள் நேற்றய தினம்  பொலிஸாரால் மீட்கப்பட்டன.

தர்மபுர பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக, முதிரை மரக்குற்றிகளை பொலிஸார் மீட்டதுடன், அவற்றை எடுத்துச் செல்லப்பயன்படுத்திய வாகனங்களுடன் மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்தனர்.

Advertisement

வாகனம் மற்றும் சந்தேக நபர்களை  இன்றைய தினம் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்  மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version