இலங்கை
நடு வீதியில் முடிந்த 24 வயது இளைஞனின் வாழ்க்கை ; பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்
நடு வீதியில் முடிந்த 24 வயது இளைஞனின் வாழ்க்கை ; பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்
மித்தெனிய – வலஸ்முல்ல வீதியில் கரமெட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று (04) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளும் பஸ்ஸும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 24 வயதுடைய இளைஞன் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.