இலங்கை

யாழில் வீட்டுக்குள் வன்முறை கும்பல் அட்டகாசம் ; அச்சத்தில் மக்கள்

Published

on

யாழில் வீட்டுக்குள் வன்முறை கும்பல் அட்டகாசம் ; அச்சத்தில் மக்கள்

   யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் புகுந்து வன்முறை கும்பல் ஒன்று வீட்டுக்கு தீ வைத்ததுடன் , வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்கு தீ வைத்து விட்டு , தப்பி சென்றுள்ளது.

சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றினுள் இரவு அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் வீட்டினுள் சென்று , பொருட்களை அடித்து உடைத்து, அவற்றுக்கு தீ வைத்து , வீட்டில் இருந்தோரை அச்சுறுத்திய பின்னர் , வீட்டின் வெளியே நின்ற முச்சக்கர வண்டிக்கும் தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளது.

Advertisement

சம்பவத்தில் முச்சக்கர வண்டி முற்றாக தீக்கிரையாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version