இலங்கை

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக தொடரும் போராட்டம்!

Published

on

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக தொடரும் போராட்டம்!

யாழ்ப்பாணம் – வலிகாமம், தையிட்டி பகுதியில் அமைந்துள்ள, சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நேற்று பிற்பகல் 4 மணிக்கு ஆரம்பமான குறித்த போராட்டம் மாலை 6 மணிக்கு நிறைவடைந்த நிலையில்,  இன்று 5ஆம் திகதி மீண்டும் காலை  ஆரம்பமாகி உள்ளது.

Advertisement

சட்டவிரோத முறையில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர், மக்களுடன் இணைந்து தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டமானது, ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version