இலங்கை

நண்பர்களுடன் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த 19 வயது இளைஞன் மாயம்

Published

on

நண்பர்களுடன் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த 19 வயது இளைஞன் மாயம்

மாத்தறை கந்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலல்ல கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாகக் கந்தர பொலிஸ் நிலையத்துக்குக் கிடைத்த முறைப்பாட்டின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் நேற்று (05) பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது.

Advertisement

காணாமல் போனவர் 19 வயதுடைய ரங்சேகொடைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

காணாமல் போன இளைஞன் மேலும் 5 பேருடன் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தபோதே கடலில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காணாமல் போன இளைஞரைத் தேடும் பணியில் ஹிரிகெட்டிய பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்ட உயிர்காப்பு உத்தியோகத்தர்களும் மற்றும் கடற்படையினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

கந்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version