பொழுதுபோக்கு
பல படங்களில் நாயகி, விபச்சார வழக்கால் திசை மாறிய வாழ்க்கை; சூப்பர் ஸ்டாருடன் நடித்த இந்த நடிகை யார் தெரியுமா?
பல படங்களில் நாயகி, விபச்சார வழக்கால் திசை மாறிய வாழ்க்கை; சூப்பர் ஸ்டாருடன் நடித்த இந்த நடிகை யார் தெரியுமா?
சினிமா ஒரு நபரை எந்த அளவுக்கு பிரபலமாக வைத்திருக்கிறதோ அந்த அளவிற்கு ஆபத்தையும் கொடுக்கும். இதை சரியாக புரிந்துகொண்டு எச்சரிக்கையாக இருந்தால் அவர்களின் புகழ் நிலைத்திருக்கும். ஆனால் சற்று தடுமாறினால் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும். இதற்கு முக்கிய உதாரணமாக நடிகை யமுனாவை சொல்லலாம். ஒரு பொய்யான விபச்சார வழக்கால் அவரது வாழ்க்கையே தடம் மாறிய போய்விட்டது. 1987-ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘மனதில் உறுதி வேண்டும்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் யமுனா. ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இவரது இயற்பெயர் பிரேமா. திரைப்படத்திற்காக இவரது பெயரை யமுனா என்று இயக்குநர் கே. பாலச்சந்தர் மாற்றினார். இவர், 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் அறிமுகமாகி இருந்தாலும், தெலுங்கு மற்றும் கன்னட மொழியில் யமுனா அதிகமாக நடித்தார். கன்னடத்தில் சிவராஜ்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த யமுனா, கடந்த 1994-ஆம் ஆண்டில் நாகார்ஜுனா ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான ‘கோவிந்தா கோவிந்தா’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இப்படம், யமுனாவிற்கு பெரும் புகழை தேடிக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து, சினிமா மட்டுமல்லாமல் சின்னத்திரை தொடர்களில் அதிகம் நடிக்கத் தொடங்கிய யமுனா, தமிழில் திருவிளையாடல், ‘அம்மன்’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டும் இல்லாமல், தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். இவரது திரைத்துறை பயணம் சீராக சென்று கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக கடந்த 2011-ஆம் ஆண்டு பெங்களூருவில் அமைந்துள்ள பிரபல நட்சத்திர விடுதியில், பாலியல் தொழிலில் ஈடுபட்ட கும்பலுடன் சேர்த்து யமுனாவும் கைது செய்யப்பட்டார். அடுத்த சில நாட்களிலேயே இவர் மீது விபச்சார வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இச்சம்பவம், யமுனாவின் சினிமா வாழ்க்கையை கடுமையாக பாதித்த நிலையில். சினிமா மற்றும் சீரியல்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.இந்த சூழலில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகை யமுனா, தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு பொய்யானது. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலியானது என்ற காரணத்தினால் நீதிமன்றம் தன்னை விடுதலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், சம்பவம் நடந்த அன்று அந்த நட்சத்திர விடுதிக்கு தாம் செல்லவில்லை என்றும் யமுனா கூறியுள்ளார். பெரும் செல்வாக்கு மிகுந்த சிலர், தன்னை இந்த வழக்கில் குற்றவாளி போன்று சித்தரித்ததாக யமுனா குற்றம் சாட்டுகிறார். இந்தப் பிரச்சனையின் விளைவாக தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் இருந்ததாகவும் யமுனா குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கின் காரணமாக சில ஆண்டுகளாக சினிமா மற்றும் சீரியலில் இருந்து ஒதுங்கி இருந்த யமுனா, தற்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.