சினிமா

தந்திரமாக சாண்ட்ரா செய்த விஷயம்.. பிக் பாஸ் சீசன் 9, இனி தான் ஆட்டமே!

Published

on

தந்திரமாக சாண்ட்ரா செய்த விஷயம்.. பிக் பாஸ் சீசன் 9, இனி தான் ஆட்டமே!

கடந்த மாதம் ஆரம்பமான பிக் பாஸ் 9 தற்போது 30 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில், கடந்த வாரம் அதிரடியாக 4 புதிய வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே வந்துள்ளனர்.ஏற்கனவே உள்ளே இருக்கும் ஹவுஸ் மேட்சுக்கு செம்ம டப் கொடுத்து விளையாடி வருவதை பார்க்க முடிகிறது. பிக்பாஸ் சில சஸ்பென்ஸ் டாஸ்க் மூலம் நிகழ்ச்சியை மேலும் சுவாரஸ்யப்படுத்த சில விஷயங்களை செய்து வருகிறார்.அந்த வகையில், குக்கிங் டீம் தலைவராக இருக்கும் சாண்ட்ராவை அழைத்து ஒரு சீக்ரெட் டாஸ்க் கொடுத்தார். அதாவது யாரவது ஒருவரை வேலையை விட்டு வெளியேற செய்ய வேண்டும்.இல்லை என்றால் ஸ்வாப் செய்ய வைக்க வேண்டும் என கூறி இருந்தார். அதன்படி, தற்போது சபரி தன்னால் இனி சிலையாக நிற்க முடியாது என கூறி சண்டை போட்டுவிட்டு வெளியேறினார்.அதை தொடர்ந்து, புதிய மேனேஜராக பொறுப்பேற்றுக்கொண்ட விக்கல்ஸ் விக்ரம் மேனேஜர் பதிவியை ராஜினாமா செய்துள்ளார்.இதன் மூலம், சாண்டரா தன்னுடைய வேலையை யாருக்கும் தெரியாமல் கட்சிதமாக முடித்துள்ளார் என தெரிய வருகிறது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்று ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்து கொண்டிருக்கின்றனர்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version