இலங்கை
பேருந்து மீது மரம் விழுந்ததில் ஒருவர் பலி!
பேருந்து மீது மரம் விழுந்ததில் ஒருவர் பலி!
கண்டியில் இருந்து ஹேவாஹட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
58 வயதுடைய ஆண் ஒருவரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 10 பேர் காயமடைந்த நிலையில் கண்டி மற்றும் பேராதனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கலஹா ஹெல்வித்தை பகுதியில் இச் சம்பவம் நேற்று மாலை 4.45 மணியளவில் இடம் பெற்றது.
மேலதிக விசாரணைகளை கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.