இலங்கை
கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம்
கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம்
காலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜாகொட்டுவெல்ல பகுதி கடற்கரையில், நேற்று(07) மதியம் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் சுமார் 65 வயது மதிக்கத்தக்கவர் எனவும், 5 அடி 3 அங்குல உயரம், பச்சைநிற சாரம் மற்றும் வெள்ளை சட்டை அணிந்திருந்ததாக பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.
சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.