இலங்கை

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

Published

on

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

இலங்கை  முழுவதும் உள்ள அரச பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் இன்றுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் டிசம்பர் 08ஆம் திகதி மீள கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. டிசம்பர் 05ஆம் திகதி வரை பரீட்சைகள்  நடைபெறவுள்ளன.

Advertisement

பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம்  டிசம்பர் 08 திகதி முதல் டிசம்பர் 19ஆம் திகதி வரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர், ஆண்டின் இறுதி விடுமுறைக்காக பாடசாலைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து எதிர்வரும் ஆண்டு 2026 ஜனவரி 01ஆம் திகதி புதிய கல்வியாண்டுக்காக பாடசாலைகள் ஆரம்பமாகும்.

தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளில் 2026 ஜனவரி 01ஆம் திகதி முதலாம் தவணையின் முதற்கட்ட கல்வி செயற்பாடுகள் ஆரம்பமாகி பெப்ரவரி 13ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. மேலும் பெப்ரவரி 14 முதல் மார்ச் 2ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளமையும்   குறிப்பிடத்தக்கது.

  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version