இலங்கை

நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு!

Published

on

நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு!

சிகிரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அவுடங்காவ பகுதியில் ஹோட்டல் ஒன்றிலுள்ள நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த  சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் களனி – தலுகம பகுதியைச் சேர்ந்த 5 வயதுடைய  சிறுவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

சிறுவன் தனது பெற்றோருடன் நீச்சல் தடாகத்தில் நீராடியபோது இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சடலம் தம்புள்ளை மருத்துவமனையின்  பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சிகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version