இலங்கை
மஹாபொல கொடுப்பனவு 2,500 ரூபாவால் அதிகரிப்பு!
மஹாபொல கொடுப்பனவு 2,500 ரூபாவால் அதிகரிப்பு!
பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு 2,500 ரூபாயினால் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அறிவித்தார். அதேபோல் தேசிய கல்வியற் கல்லூரிகளில் பயிலும் ஆசிரிய மாணவர்களுக்கான கொடுப்பனவு 2,500 ரூபாயினால் அதிகரிக்கப்படும்.
விசேட தேவையுடைய பிள்ளைகள் உயர் கல்வியை பெறுவதற்காக 5,000 ரூபாய் மாதாந்த கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நாடளாவிய ரீதியில் உள்ள தொழிற் பயிற்சி நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கு 8,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.