இலங்கை

அநுராதபுரம் – தலாவயில் பேருந்து விபத்து: ஐவர் பலி!

Published

on

அநுராதபுரம் – தலாவயில் பேருந்து விபத்து: ஐவர் பலி!

அநுராதபுரம், தலாவ, ஜயகங்க சந்திப் பகுதியில் 411 கிராமத்திற்கு பயணித்த தனியார்  பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

குறித்த பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ததாகவும், விபத்தில் சுமார் 40 பேர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்களை  தலாவ மருத்துவமனைக்கு  அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்றும் காயமடைந்தவர்களில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களும் அடங்குவதாகப் தலாவப் பொலிஸார் தெரிவித்தனர். 

Advertisement

குறித்த பேருந்து விபத்தில் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனைக்கு  கொண்டு செல்லப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version