இலங்கை

கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் அபாய அளவு; மக்கள் முக கவசம் அணிய அறிவுறுத்து

Published

on

கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் அபாய அளவு; மக்கள் முக கவசம் அணிய அறிவுறுத்து

  காற்றின் தரம் தற்போது ஆரோக்கியத்துக்குப் பாதகமான அளவுக்கு குறைந்துள்ளதால மக்கள் முக்க கவசங்களை அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் தற்போது ஆரோக்கியத்துக்குப் பாதகமான அளவுக்கு குறைந்துள்ளதாக, காற்றுத் தரக் குறியீட்டு (AQI) முறைமையின் நேரடி தரவுகள் தெரிவிக்கின்றன.

Advertisement

இதன்படி கதுருவெல, சிலாபம், அகரகம, வந்துரகல, திகன, மடம்பகம, ஹங்கம, அக்கரைப்பற்று, கலவான, முள்ளியவளை,பன்னங்கண்டி மற்றும் உப்புவெளி ஆகிய இடங்களுடன், யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பின் பல பகுதிகளும் அடங்கும்.

காற்றிலுள்ள மாசு அளவு நீண்ட நேரம் சுவாசிப்பதற்கு ஆபத்தான அளவை எட்டியுள்ளது.

இது சிறுவர், முதியோர், மற்றும் சுவாச அல்லது இதய நோய்கள் உள்ளவர்களுக்கு மிகவும் ஆபத்தானது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Advertisement

இதனால் குறித்த பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியில் செல்லும் போது முகக்கவசத்தை அணியுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version