இலங்கை

பேருந்தும் லொறி ஒன்றும் மோதி மற்றுமொரு விபத்து

Published

on

பேருந்தும் லொறி ஒன்றும் மோதி மற்றுமொரு விபத்து

  புத்தல – மொனராகலை பிரதான வீதியில், 11 ஆம் மைல்கல் பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து இன்று ( 10) மதியம் இடம்பெற்றுள்ளது

Advertisement

விபத்தில் லொறியின் சாரதியும் உதவியாளரும் காயமடைந்த நிலையில், புத்தல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

காயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பேருந்தில் பயணித்த சில பயணிகளுக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

விபத்து தொடர்பில் புத்தல பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை அனுராதபுர பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற விபத்தில் உயர்தர பரீட்சைக்கு சென்ற மாணவன் உட்பட 6 பேர் உயிரிழந்ததுடன், 50 மேற்பட்டோர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version