இலங்கை
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 800 முறைப்பாடுகள்!
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 800 முறைப்பாடுகள்!
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாகத் தகவல் வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட 1818 தொலைபேசி இலக்கத்துக்கு 800 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டச் செயலகத்தில் நேற்று உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.
1818 எனும் அவசர அழைப்பு இலக்கத்துக்கு கடந்த 4 நாட்களில் 800 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அதில் பாடசாலை தொடர்பான தகவல்களும் கிடைத்துள்ளன. குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த முறைப்பாடுகள் பொலிஸ் மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேபோல் கடந்த நான்கு நாட்களில் 5300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதனடிப்படையில், கொழும்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பரவல் அதிகமாக உள்ளதைக் காண முடிந்தது எனக் கூறியுள்ளார்.