இலங்கை

மட்டக்களப்ப்பில் போதைப்பொருளுடன் சிக்கிய பிள்ளையானின் சகா!

Published

on

மட்டக்களப்ப்பில் போதைப்பொருளுடன் சிக்கிய பிள்ளையானின் சகா!

    மட்டக்களப்பு நகரில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட, மட்டு மாநகர சபையின் முன்னாள் முதல்வரின் கணவரும் பிள்ளையானின் மொழி பெயர்ப்பாளருமான நபரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய மட்டு. நீதவான் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டு்ள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து ஊழல் மற்றும் போதை ஒழிப்பு பிரிவு பொலிஸார் சம்பவ தினமான வெள்ளிக்கிழமை (07) இரவு முதலியார் வீதியில் உள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்ட போது அங்கு போதைப் பொருள்  வியாபாரத்தில் ஈடுபட்ட, பிள்ளையானின் மொழிப்பெயர்பாளரும், மட்டு மாநகர சபை முன்னாள் முதல்வரின் கணவருமான நபர், 5 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

இதனை தொடர்ந்து குறித்த அதிகாரிகள், வீதியில் உள்ள வீடொன்றில் தச்சு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கூழாவடி பகுதியைச் சேர்ந்த ஒருவரை 250 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட இருவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் சனிக்கிழமை(08) அன்று ஆஜர்படுத்திய போது சந்தேக நபரை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (11) வரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து 250 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட தச்சு தொழிலாளி பிணையில் விடுவிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version