இந்தியா

350 கிலோ வெடிமருந்து, ஏ.கே-47… டாக்டர் வீட்டில் தோண்டத் தோண்ட வந்த பயங்கர ஆயுதங்கள்; தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு

Published

on

350 கிலோ வெடிமருந்து, ஏ.கே-47… டாக்டர் வீட்டில் தோண்டத் தோண்ட வந்த பயங்கர ஆயுதங்கள்; தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு

J&K Police recovered 300 kg RDX: ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் நடந்த தேடுதல் நடவடிக்கையில், ஜம்மு-காஷ்மீர் மாநில போலீசார் தௌஜ் கிராமத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் இருந்து 350 கிலோ வெடிமருந்துகளைக் கைப்பற்றினர். இது அம்மோனியம் நைட்ரேட் (Ammonium Nitrate) எனச் சந்தேகிக்கப்படுகிறது. அத்துடன், ஒரு AK-47 துப்பாக்கி, 1 கைத்துப்பாக்கி, 3 மேகசின்கள் (Magazines), 20 டைமர்கள், 1 வாக்கி-டாக்கி மற்றும் வெடிபொருட்களும் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் போது ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ஒரு மருத்துவரும் கைது செய்யப்பட்டதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். பரிதாபாத் காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்த நடவடிக்கையின் போது நகர காவல்துறையினரும் உடன் இருந்ததாகத் தெரிவித்தார்.தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது (Jaish-e-Mohammed) பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவாக அக்.27-ல் ஸ்ரீநகரில் போஸ்டர்களை ஒட்டியதாக கூறப்படும் குற்றச்சாட்டில், உத்தரபிரதேசத்தின் சஹாரன்பூரில் காஷ்மீரி மருத்துவர் டாக்டர் ஆதில் அஹ்மத் ரத்தர் என்பவரை கைது செய்ததை தொடர்ந்து இந்த வெடிமருந்து மீட்பு நிகழ்ந்துள்ளது.திங்கள்கிழமை மதியம் நடந்த செய்தியாளர் சந்திப்பில், பரிதாபாத் காவல்துறை ஆணையர் சதேந்தர் குமார் குப்தா, டாக்டர் ரத்தரிடம் நடத்திய விசாரணையின் போது கிடைத்த தகவல்கள், டாக்டர் முஜம்மில் ஷகீல் (Dr Mujammil Shakeel) என்பவருக்கு கூட்டிச் சென்றதாகத் தெரிவித்தார். இவரும் ஜம்மு & காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்தவர் மற்றும் பரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலா (Al-Falah) மருத்துவமனையில் பணிபுரியும் மற்றொரு மருத்துவர் ஆவார்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க3 மாதங்களுக்கு முன்பு தௌஜ் கிராமத்தில் வீட்டை வாடகைக்கு எடுத்திருந்த டாக்டர் ஷகீல், ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒரு ஒருங்கிணைந்த சோதனையில் கைது செய்யப்பட்டதாகவும், அவரது இல்லத்தில் இருந்து இந்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் போலீஸ்தெரிவித்தது. சில ஊடகங்களில் ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டபடி இது RDX அல்ல, இது அம்மோனியம் நைட்ரேட் தான் என்று பரிதாபாத் காவல்துறை ஆணையர் தெளிவுபடுத்தினார்.முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர், அனந்த்நாகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் டாக்டர் ரத்தரின் லாக்கரை சோதனையிட்டனர். அங்கு அவர் கடந்த ஆண்டு அக்டோபர் வரை மூத்த ரெசிடெண்டாகப் பணிபுரிந்தார். அந்த சோதனையில் ஒரு AK-47 துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டன. டாக்டர் ரத்தர் மீது ஆயுதச் சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (UAPA) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.தொடரும் விசாரணைடெல்லிக்கு மிக அருகில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்த வெடிபொருட்களின் நோக்கம் என்ன என்பதும், இவ்வளவு பொருட்கள் யாருக்கும் தெரியாமல் எப்படி கொண்டு செல்லப்பட்டது என்பதும் குறித்து காவல்துறை இன்னும் கண்டறியவில்லை. இது குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருகின்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version